திருமணத்திற்கு வருவோருக்கு குவாட்டர்,சிக்கன் இலவசம் - ஆதார் கட்டாயம்..!
சிவங்கையில் நடைபெற்ற திருமண விழாவுக்கு வந்தவர்களில் திருமணம் ஆனவர்களுக்கு ஒரு குவாட்டரும், திருமணம் ஆகாதவர்களுக்கு இரண்டு குவாட்டரும் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு திருமணத்திற்கு வருபவர்களுக்கு பொதுவாக நன்கு உணவு பரிமாறி, தாம்பூல பையை வழங்குவார்கள். ஆனால்.
சிவகங்கை அருகே நடந்த ஒரு திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மாப்பிள்ளை வீட்டார் அளித்த பொருள் விவாதமாகியுள்ளது.
அதாவது திருமணத்துக்கு வந்தவர்களில் திருமணம் ஆனவர்களுக்கு ஒரு குவாட்டரும், திருமணம் ஆகாதவர்களுக்கு இரண்டு குவாட்டரும் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை அருகே கீழகண்டனி கிராமத்தில் ஜெயமுத்து, சரண்யா,ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்று பிளக்ஸ் போர்டு வைத்து இருந்தனர்.
மேலும் அதில் திருமணம் ஆனவர்கள் என்றால் ஒரு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்றும், திருமணம் ஆகதாவர்களுக்கு இரண்டு குவாட்டரும் சிக்கனும் இலவசமாக கொடுக்கப்படும் என்றும் அதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
அதன்படி திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதார் கார்டை வாங்கி பார்த்து விதிமுறை படி குவாட்டர்களை கொடுத்து குடிமகன்களை குஷி படுத்தியுள்ளனர்.
35 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே குவாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.குவாட்டர் பாட்டில் வேண்டாம் என்போருக்கு பீர் பாட்டில் வழங்கப்பட்டது.
இவர்களது வித்தியாசமான முயற்சி குடிமகன்களை குஷிபடுத்தினாலும், நிகழ்ச்சிக்கு வந்த பெண்களை முகம் சுழிக்க வைத்தது.