தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம்

Marriage-Hall Viral-Video Groom-Bride Stop-Marriage
By Nandhini Apr 20, 2022 05:12 AM GMT
Report

கேரள மாநிலம், மந்துருதி பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், கருநாகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கோவிலில் மணமகன் தாலிக்கட்ட வாந்தார். அப்போது, மணப்பெண் திருமணத்தில் விருப்பம் இல்லையென்று கூறி மேடையிலிருந்து கீழே இறங்கி அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

இதனையடுத்து, பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணமகளை அங்கிருந்து மீட்டு போலீஸ் ஜீப்பில் பத்திரமாக ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இரு வீட்டாரும் காவல் நிலையத்திற்கு சென்றனர். அப்போது, போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பெண் வீட்டார் ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு நஷ்டஈடு கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, மாப்பிள்ளை வீட்டார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தாலிக்கட்டும் நேரத்தில் பெண் கல்யாணத்தை நிறுத்தியதால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.  

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம் | Marriage Hall Groom Bride Stop Marriage