மழையால் நனைந்த சாக்ஸ் - தங்கப்பதக்கத்தை தவறவிட்ட மாரியப்பன் தங்கவேலு
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு தனது கள அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்துவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மற்றொரு வீரரான சரத்குமார் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். பாராலிம்பிக்கில் தங்கவேலு வெல்லும் 2வது பதக்கம் இதுவாகும். அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இன்று போட்டி ஆரம்பித்தபோது லேசாக மழை தூரல் இருந்ததாகவும், ஆரம்பத்தில் சிரமம் தெரியவில்லை. ஆனால் 1.80 மீட்டர் உயரத்தைக் கடந்து தாண்டும் போது மழை அதிகமானது.
இதில் மழைநீரில் நனைந்து எனது சாக்ஸ் ஈரமானது. அப்போது தான் நான் உண்மையான சவாலை சந்தித்தேன்.
எனக்கு டேக் ஆஃபில் பிரச்சினை தென்பட்டது. இல்லாவிட்டால் நிச்சயமாக 1.90 மீட்டரைக் கடந்திருந்து தங்கம் வென்றிருப்பேன் என்று மாரியப்பன் தங்கவேலு கூறியுள்ளார்.