எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே : டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளி பதக்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு!

Tokyo2020 mariyapanthangavelu TokyoParalympics
By Irumporai Aug 31, 2021 11:38 AM GMT
Report

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்றார் தமிழ்நாடு வீரர் மாரியப்பன்.

இன்று நடைபெற்ற T63 உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

மாரியப்பன் தங்கவேலு கடந்த 2016 ரியோ பாராலிம்பிக்கிலும் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றிருந்தார். அதில், 1.89 மீட்டருக்கு உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார். அந்த பாராலிம்பிக்கில் இந்தியா இரண்டு தங்கப்பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. அதில் மாரியப்பன் வென்று கொடுத்து தங்கமும் ஒன்று. உலகளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தினார்.

பாராலிம்பிக் அரங்கில் இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்க காரணமாக இருந்திருந்தார். சேலத்தில் எளிய பின்னணியை கொண்ட குடும்பத்தில் பிறந்த மாரியப்பன் . சிறுவயதில் நிகழ்ந்த ஒரு பேருந்து விபத்தில் மாரியப்பனின் காலில் பாதிப்பு ஏற்பட்டது.

ஆனாலும் தனது விடா முயற்சியால் தற்போது வெள்ளி பதக்கம் வென்று சாதித்துள்ளார் டோக்கியோ பாராலிம்பிக்ஸின் தொடக்க விழா அணிவகுப்பில் மாரியப்பன் தங்கவேலுவே இந்திய கொடியை ஏந்தி இந்திய வீரர்வீராங்கனைகளை வழிநடத்தி செல்வதாக இருந்தது.

ஆனால், மாரியப்பன் பயணம் செய்த விமானத்தில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் மாரியப்பன் குவாரண்டைனில் இருக்க வேண்டிய சூழல் உண்டானது இதனால் தேக் சந்த் எனும் வேறொரு வீரர் மாரியப்பனுக்கு பதில் கொடியேந்தி சென்றார். குவாரண்டைன் ஒரு மன அழுத்தம் தரக்கூடிய விஷயம்தான் என்றாலும் மாரியப்பன் அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வெள்ளி பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் டி42 போட்டியில் இறுதியாக அமெரிக்க வீரர் சாம் கிரீவ் - மாரியப்பன் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. 1.88 மீ. உயரம் உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார். இதையடுத்து 1.86 மீ. உயரம் தாண்டிய இந்திய வீரர் மாரியப்பனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது

இதே போல் பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் சரத்குமார் ,இதன் மூலம் தற்போது  இந்தியா 10 பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளது.