நேரில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாரியப்பன் : முதல்வரிடம் வைத்த கோரிக்கை என்ன?
பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் .
டோக்கியோ பாரலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற தடகள வீரர் மாரியப்பன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தார்.
'மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், இன்று (05-09-2021), டோக்கியோ #Paralympics போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற திரு @189thangavelu அவர்களை பாராட்டி வாழ்த்தினார்'#CMMKStalin #DMK pic.twitter.com/4HOLtEPV2j
— DMK (@arivalayam) September 5, 2021
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாரியப்பன் தமிழக முதல்-அமைச்சரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்ததாகவும் முதல்-அமைச்சர் தனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அரசுவேலை வழங்குமாறு கோரிக்கை வைத்ததாகவும், தமது கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.