தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை இழந்த மாரியப்பன்- ரசிகர்கள் சோகம்

missed mariappan oppurtunity carry national flag
By Anupriyamkumaresan Aug 25, 2021 06:01 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விளையாட்டு
Report

கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் பாராலிம்பிக் போட்டிகளின் அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை இழந்தார் இந்திய உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன்.

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் பாரலம்பிக் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றன.

தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை இழந்த மாரியப்பன்- ரசிகர்கள் சோகம் | Mariappan Missed Opportunity Carry National Flag

54 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஈட்டி எறிதல் வீரர் டெக் சந்த் தலைமையேற்று தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்து.

ஆனால் டோக்யோ சென்ற விமானத்தில் கொரோனா பாதித்தவருடன் மாரியப்பன் தொடர்பில் இருந்ததால், பாதுகாப்பு கருதி தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

டோக்கியோவுக்கு மாரியப்பன் உள்ளிட்ட இந்திய அணியினர் சென்ற விமானத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை இழந்த மாரியப்பன்- ரசிகர்கள் சோகம் | Mariappan Missed Opportunity Carry National Flag

இதையடுத்து அந்த பயணியின் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்தவர் என்ற வகையில் மாரியப்பன், வட்டு எறிதல் வீரர் வினோத்குமார் உள்பட 6 இந்தியர்கள் விளையாட்டு கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.