கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டு தமிழகத்தில் பலர் சுற்றி திரிகின்றனர் - இபிஎஸ் சாடல்!

M K Stalin Tamil nadu Edappadi K. Palaniswami
By Swetha Jul 20, 2024 03:30 AM GMT
Report

கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டு தமிழகத்தில் பலர் சுற்றி திரிகின்றனர் என இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

 இபிஎஸ் சாடல்..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி’’ என்று பாடினார் எம்ஜிஆர். அவரின் ரசிகன் நான் என்றும், அவரது படங்களை பார்த்தே வளர்ந்தவன் நான்’ என்றும் தேவைக்கேற்றார்போல்,

கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டு தமிழகத்தில் பலர் சுற்றி திரிகின்றனர் - இபிஎஸ் சாடல்! | Many Murderers Roaming In Tn Freely Says Eps

சந்தர்ப்பத்திற்கேற்றார்போல் சொல்லக்கூடிய இந்த திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தராமல், அவர்களை சிரமத்திற்குள்ளாக்கி தனது நிர்வாகத் திறமையின்மையை நாள்தோறும் வெளிக்காட்டி வருகிறார்.

கடந்த மூன்றாண்டுகளாக திமுக ஆட்சியில் நடைபெறக்கூடிய சமூக விரோதச் செயல்களை சுட்டிக்காட்டினால், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று வக்கணை பேசும் ஸ்டாலின், நான் எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்த பின்னரும் காவல் துறையினரை சுதந்திரமாக செயல்பட விடாமல் வைத்திருப்பது,

200 நாட்களில் 595 கொலைகள்; திமுக ஆட்சியில் தலைநகரம் கொலைநகரம் ஆகியுள்ளது - எடப்பாடி பழனிசாமி

200 நாட்களில் 595 கொலைகள்; திமுக ஆட்சியில் தலைநகரம் கொலைநகரம் ஆகியுள்ளது - எடப்பாடி பழனிசாமி

கொலையே தொழிலாக..

நாள்தோறும் நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களின் மூலம் நிரூபணமாகிறது.யார் ஆட்சியில் இருந்தாலும் அங்கொன்றும், இங்கொன்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வக்கிர புத்தி படைத்தவர்களாலும், ஒருசில கொலைகள் நடப்பது இயல்பு. குற்றவாளிகளை காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்வது நடைமுறை.

கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டு தமிழகத்தில் பலர் சுற்றி திரிகின்றனர் - இபிஎஸ் சாடல்! | Many Murderers Roaming In Tn Freely Says Eps

ஆனால், திமுக ஆட்சியில் கொலைகள் செய்வதையே தொழிலாகக் கொண்டு பலர் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து வெறியாட்டம் ஆடுவதும், பல கொலைகளில் ஈடுபட்ட கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறுவதும் கண்கூடாகும்.

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தின் தலைநகராம் சென்னை கொலை நகரமாக மாறியுள்ளது என்ற நிலையில், கடந்த 200 நாட்களாக தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 80 கொலைகளும்; பிப்ரவரி மாதம் 64 கொலைகளும்; மார்ச் மாதம் 53 கொலைகளும்;

தமிழகத்தில் பலர்.. 

ஏப்ரல் மாதம் 76 கொலைகளும்; மே மாதம் 130 கொலைகளும்; ஜூன் மாதம் 104 கொலைகளும்; ஜூலை 17-ஆம் தேதி வரை 88 கொலைகளும் என, மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டு தமிழகத்தில் பலர் சுற்றி திரிகின்றனர் - இபிஎஸ் சாடல்! | Many Murderers Roaming In Tn Freely Says Eps

‘அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்’ என்ற இருமாப்போடு இனியும் செயல்படாமல், சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து,

போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.