இன்னும் பல அமைச்சர்கள் கைதாவர்கள் - எடப்பாடி பழனிசாமி அதிரடி..!!

M K Stalin DMK Edappadi K. Palaniswami K. Ponmudy
By Karthick Dec 21, 2023 05:56 AM GMT
Report

அமைச்சர் பொன்முடிக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பொன்முடி வழக்கு

அமைச்சர் பொன்முடிக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.

many-ministers-will-go-to-prison-eps

இந்நிலையில், தான் அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு குறைஞ்சபட்ச தண்டனையை வழங்கப்படவேண்டும் என பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தண்டனை 6 மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி விமர்சனம்

மேலும், 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

many-ministers-will-go-to-prison-eps

இது குறித்து அவர் பேசும் போது, திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறி, 2 1/2 ஆண்டுகளில் திமுகவினர் ஊழல் மட்டுமே செய்துள்ளனர் என்றும் விமர்சித்தார்.