சிவகார்த்திகேயன்..நீங்களே இப்படி பண்ணலாமா? - மனோபாலாவுக்கு நேர்ந்த சோகம்
நடிகர் சிவகார்த்திகேயன் செய்த செயல் ஒன்று இயக்குநரும், நடிகருமான மனோ பாலாவை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனன், எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “டான்”. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் மே 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கி உள்ள நிலையில், அதன் உரிமையாளரும், நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
எங்கப்பா என் பேரு...??? https://t.co/4gzsn1B7Hl
— Manobala (@manobalam) May 6, 2022
இதனிடையே டான் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை வெளியிட்ட சிவகார்த்திகேயன் அதற்காக சிறப்பு போஸ்டர் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் படத்தில் பணியாற்றிய பிரபலங்களின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதில் தன்னுடைய பெயர் இல்லாததை கவனித்த நடிகர் மனோபாலா, எங்கப்பா என் பேரு...?’ என சிவகார்த்திகேயனுக்கு கேள்வி எழுப்ப இதைப்பார்த்த நெட்டிசன்கள், சீனியர் நடிகரை இப்படி புறக்கணிக்கலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.