மணிப்பூர் முதல்வர் குறித்து விமர்சித்த மாணவனை அடித்து கொன்ற 800 பேர் கொண்ட கும்பல் - தப்பி ஓடிய போலீசார்!

India Death Manipur
By Jiyath Jul 24, 2023 08:11 AM GMT
Report

மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை குறித்து விமர்சனம் செய்து சமூக வலைத்தளத்தில் எழுதிய மாணவனை 800 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்துள்ளனர்.

மணிப்பூர் வன்முறை

மணிப்பூர், பெரும்பான்மையாக இருக்கக்கூடிய `மைதேயி' சமூக மக்கள், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து `குக்கி' பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர். இதில் ஒருவருக்கொருவர் மோதியதில், கலவரம் நாளுக்கு நாள் பெரும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

மணிப்பூர் முதல்வர் குறித்து விமர்சித்த மாணவனை அடித்து கொன்ற 800 பேர் கொண்ட கும்பல் - தப்பி ஓடிய போலீசார்! | Manipur Student Killed Voilence Ibc 09 00

வன்முறையில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற இளைஞர்கள் சிலர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவமும் அரங்கேறியது. 60 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் வன்முறையில் இதுவரை 142 பேர் பலியாகியுள்ளனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இளைஞர் அடித்து கொலை

இந்நிலையில் சுராசந்த்பூர் கல்லூரியில் படித்து வரும் ஹங்லால்முவான் வாய்பேய் என்ற 21 மாணவன் குக்கி இன மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் மெய்தி இன அரசியல்வாதிகளையும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் முதலமைச்சர் பிரென் சிங் குறித்தும் விமர்சித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதி பதிவிட்டுள்ளார்.

இதனால் அந்த மாணவனை போலீசார் மே 4ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைக்க அழைத்துச் சென்றபோது வழியில் சுற்றி வளைத்த 800 பேர் கொண்ட கும்பல் மாணவனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அந்த கும்பலை எதிர்கொள்ள முடியாமல் போலீசார் தப்பி ஓடியதாகவும் வன்முறை கும்பலின் வெறிச் செயலால் இளைஞர் உயிரிழந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில் இறந்த மாணவனின் உடலைக் கூட அவரின் பெற்றோர்களால் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.