தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் - யார் இந்த மாணிக்கம் தாகூர்?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான மாணிக்கம் தாகூர்
கடந்த பிப்ரவரி 2024 முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப்பெருந்தகை செயல்பட்டு வந்தார்.

தற்போது செல்வப்பெருந்தகையை மாற்றி விட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Hon'ble Congress President has appointed Shri B. Manickam Tagore as the President of Tamil Nadu Pradesh Congress Committee, with immediate effect. pic.twitter.com/FofLBcuqWz
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) June 27, 2026
1994 ஆம் ஆண்டு காங்கிரஸின் மாணவர் அமைப்பு மாவட்ட பொதுச் செயலாளர் முதல் இந்திய இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர், தெலங்கானா காங்கிரஸின் AICC பொறுப்பாளர் என காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

மேலும், 2009 முதல் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு, 2014 தேர்தலில் மட்டும் தோல்வியடைந்தார்.
தற்போது விருதுநகர் தொகுதி எம்பியாக உள்ள மாணிக்கம் தாகூர், தேர்தலுக்கு முன்னர் இருந்தே காங்கிரஸ் தவெக கூட்டணியில் இணைய வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |