ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா அறிவிப்பு

Naam tamilar kachchi Seeman Erode
By Thahir Jan 30, 2023 02:41 AM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் போட்டியிடுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

 ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் கடந்த 4ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா காலமானார். இதனிடையே இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு 

இதையடுத்து தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. இதே போன்று நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் வேட்பாளரை நேற்று சீமான அறிவித்துள்ளார்.

Maneka announced as Naam Tamilar Party candidate

ஈரோடு சூரம்பட்டி வலசு நால்ரோடு என்ஜிஜிஓ காலனி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டு வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.

பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோட்டை சேர்ந்த மேனகா நவநீதன் என்பவர் போட்டியிட போவதாக அறிவித்தார்.