? Live: மாண்டஸ் புயல் எதிரொலி : சென்னை விமான நிலையத்தில் 27 விமானங்கள் ரத்து...!
மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல்
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வழுவிழந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.
நாகப்பட்டினம் அருகே இருக்கும் இந்த மாண்டஸ் புயல் காரணமாக வடக்கு மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் கனமழை மற்றும் தீவிர காற்று வீசிக்கொண்டிருக்கிறது.
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 180 கிமீ துாரத்தில் மையம் கொண்டிருக்கிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது.
இதனால் நாளை சென்னை, காஞ்சிபுரம், வேலுார், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
27 விமானங்கள் ரத்து
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 16 விமானங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.