அதிபர் 'ஜோ பைடனுக்கு' கொலை மிரட்டல் விடுத்த ட்ரம்பின் ஆதரவாளர் சுட்டு கொலை!

Donald Trump Joe Biden United States of America Joe Root World
By Jiyath Aug 10, 2023 06:55 AM GMT
Report

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

கொலை மிரட்டல்

முன்னாள் அமெரிக்க அதிபர் 'டோனால்ட் ட்ரம்பின்' ஆதரவாளர்களுக்கும், தற்போதைய அதிபர் 'ஜோ பைடன்' ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் கடுமையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.அதில் உடா மாநிலத்தை சேர்ந்த 'க்ரெய்க் ராபர்ட்ஸன்' என்ற தீவிர ட்ரம்ப் விசுவாசி ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் அதிபர் பைடனை குறித்து தீவிரமான கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

அதிபர்

கடந்த 2022ம் ஆண்டு இவர் வெளியிட்ட பதிவு ஒன்றில் "அதிபர் கொலைக்கான நேரம் வந்துவிட்டது, முதலில் ஜோ, பிறகு கமலா என குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக கிரிமினல் வழக்கு ஒன்றை தொடர்ந்த மன்ஹாட்டன் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் 'ஆல்வின் ப்ராக்' என்பவரையும் கொல்லப் போவதாக கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து அதிபர் ஜோ பைடன் உடா மாநிலத்திற்கு வருகை தருவதால் தனது எம்24 ஸ்னைப்பர் வகை துப்பாக்கியை உபயோகப்படுத்தும் காலம் வந்து விட்டது என்றும் க்ரெய்க் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார். அதனுடன் பலவகை துப்பாக்கிகளையும் அவர் பதிவிட்டிருந்தார்.

சுட்டுக் கொலை

இந்நிலையில் உடா மாநிலத்தில், ப்ரோவோ எனும் இடத்தில் உள்ள க்ரெய்க் ராபர்ட்ஸன் வீட்டிற்கு தேடுதல் மற்றும் கைது வாரண்டுடன் அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரிகள் சென்றனர். அங்கு நடந்த நடவடிக்கையில் க்ரெய்க் ராபர்ட்ஸன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதிபர்

க்ரெய்க் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் முழு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.