தட்டி கேட்டவரின் மூக்கை கடித்து துப்பிய கொடூரம் - காரணத்தை கேட்டு மிரண்டு போன போலீஸ்!

Tamil nadu Crime Vellore
By Vidhya Senthil Oct 16, 2024 03:22 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

மழைநீர் வீட்டின் அருகே மழைநீர் தேங்கியதால் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரின் மூக்கை கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மழைநீர்

வேலூர் மாவட்டம், திருவலம் காரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். கடந்த 2 நாட்களாகப் பெய்த கனமழையால் வீட்டு முன்பு மழைநீர் தேங்காமல் இருக்க மண்ணை கொட்டி மேடாக்கியுள்ளார். அப்போது பக்கத்து வீட்டுக்காரரான ரமேஷ் என்பவருக்கும் பரசுராமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

vellore

இந்த தகராறு வாக்குவாதமாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரமேஷ் பரசுராமனை ஆக்கி மட்டையால் தலையில் தாக்கியுள்ளார். இதனைக் கண்ட பரசுராமனின் தம்பி தமிழரசன் ஓடி வந்து தடுக்க முயன்றுள்ளார். அப்போது ரமேஷ் தமிழரசனின் மூக்கை கடித்துத் துப்பியுள்ளார்.

மாமியார், மருமகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - தந்தை, மகன் முன் நடந்த கொடூரம்

மாமியார், மருமகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - தந்தை, மகன் முன் நடந்த கொடூரம்

இதனால் ரத்தம் சொட்ட சொட்ட மூக்கை பிடித்துக் கொண்டு நின்ற தமிழரசனை ரமேஷின் தம்பி அருள் வாயில் பலமாகச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.இந்த சம்பவத்தில் தமிழரசனின் பல் உடைந்து தரையில் சிதறி உள்ளது.

கொடூரம்

இந்த சம்பவம் குறித்து பரசுராமன் திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரினை பெற்றுக் கொண்ட திருவலம் எஸ்ஐ பால வெங்கட்ராமன் காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

arrest

அங்குப் பரசுராமனுக்குத் தலையில் ஆறு தையல் போடப்பட்டுள்ளது. கடிபட்ட தமிழரசனின் மூக்கின் பகுதியினை மீண்டும் அதே இடத்தில் பொருத்தி சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சாதாரண சண்டையில் பல்லை உடைத்து மூக்கை கடித்துத் துப்பிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.