சந்தேகம் இருந்தால் ஹோட்டலுக்கு வா.. இளம்பெண்ணை அழைத்து 40 வயது நபர் செய்த காரியம் - அதிர்ச்சி!

Sexual harassment Salem
By Vinothini Nov 06, 2023 10:01 AM GMT
Report

 இளம்பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்து 40 வயது நபர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்

புதுக்கோட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண், நீட் தேர்விற்காக சேலத்தில் தங்கி அங்கிருக்கும் கோச்சிங் சென்டரில் படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன், புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரது போனில் பேலன்ஸ் இல்லாததால் வீட்டிற்கு பேசவேண்டும் என்று ஒரு நபரிடம் போன் வாங்கி பேசியுள்ளார்.

சந்தேகம் இருந்தால் ஹோட்டலுக்கு வா.. இளம்பெண்ணை அழைத்து 40 வயது நபர் செய்த காரியம் - அதிர்ச்சி! | Man Tried To Harass Neet Exam Student In Salem

அப்பொழுது இருவரும் அறிமுகமாகி கொண்டனர், அவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சக்திதாசன் என்று கூறியுள்ளார். அந்த பெண் கோச்சிங் சென்டரில் படிப்பதாக கூறியதும் இவர் தான் எம்.எஸ்சி. விலங்கியல், பி.எச்டி. முடித்துள்ளதால், நீட் தேர்வுக்காக உதவி செய்வதாக சொல்லியிருக்கிறார்.

பின்னர், இருவருமே செல்போன் நம்பர்களை பரிமாறி கொண்டு பேசி வந்தனர்.

பாடம் பயில வந்த 60 மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வர் - அதிர்ச்சி!

பாடம் பயில வந்த 60 மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வர் - அதிர்ச்சி!

அதிர்ச்சி சம்பவம்

இந்நிலையில், சக்திதாசன் அந்த பெண்ணுக்கு போன் செய்து, "வேலை விஷயமாக, தர்மபுரியில் இருந்து, சேலத்துக்கு வரேன், புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளேன், நீட் தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஹோட்டல் ரூமுக்கு வந்து கேள்" என்று கூறியுள்ளார். இதையும் நம்பி அந்த பெண் சென்றுள்ளார்.

man-tried-to-harass-neet-exam-student-in-salem

இருவரும் நீட் தேர்வு தொடர்பாக பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், திடீரென அந்த பெண்ணின் கையை பிடித்து பாலியல் ரீதியாக அணுகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அவரை எதிர்த்து தப்ப முயன்றுள்ளார், அப்பொழுது அவர் தனது பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அந்த கத்தியை பிடுங்கிய பெண் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினார். அப்பொழுது அந்த ஹோட்டல் ஊழியர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், இருவரையும் மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அந்த நபர் கவலைக்கிடமான நிலைமையில் உள்ளார்.