வாவ்... இப்படி ஒரு சர்ப்ரைஸா? - 50 வது திருமண நாளில் மனைவியை அசரவைத்த கணவர்!
50 திருமணநாளை முன்னிட்டு தனது மனைவிக்கு கணவர் சூப்பரான பரிசு அளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விவசாயி
அமெரிக்காவில் உள்ள கன்ஸாஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் லீ வில்சன் மற்றும் ரெனி வில்சன். இவர்கள் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ம் தேதி 50-வது திருமணநாளை கொண்டாடவுள்ளனர். இவரது மனைவிக்கு சூரியகாந்தி பூ என்றால் மிகவும் பிடிக்குமாம்.
இந்த பூ குளிர்காலம் முடியும் காலநிலையில் தான் வளரும், அனால் இவர் தனது மனைவியின் ஆசைக்காக அந்த பூ பற்றி முழுவதுமாக தெரிந்துக்கொண்டு . இவர் தனது 80 ஏக்கர் வயல் முழுவதும் சூரியகாந்தியை பயிர் செய்துள்ளார். இதை தன் மகனின் உதவியுடன் செய்ததோடு, இதை தன் மனைவிக்குத் தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளார்.
சர்ப்ரைஸ்
இந்நிலையில், அந்த சூரியகாந்தி பூ அழகாக வளர்ந்திந்து பூத்து குலுங்கியுள்ளது. இந்த நேரத்தில் அவர் தன் மனைவியை நேரில் அழைத்துவந்து காட்டி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நானும் ரெனியும் எங்கள் உயர்நிலை பள்ளிக்காலத்தில் இருந்து ஒன்றாக இருக்கிறோம்.
அப்போது அவளை டேட் செய்வதற்காக அழைத்தேன். ஆனால் அவள் பயந்துகொண்டு வரவில்லை. பின்னர் அவளின் 16-வது வயதில் எங்களின் திருமணம் முடிந்தது. அதன் பிறகுதான் எங்களுக்கு முதல் டேட் இருந்தது. அப்போதிலிருந்து இருவரும் ஒன்றாக இருக்கிறோம். ஆகஸ்ட் 10-ம் தேதி எங்களின் 50-வது திருமண நாளைக் கொண்டாடவுள்ளோம், அதற்கு என் மனைவியை சர்ப்ரைஸ் செய்யத்தான் இந்த சூரியகாந்தி ஏற்பாடு" என்று அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அவரது மனைவி கூறுகையில், "என் 50-வது திருமண நாளுக்கு இதைவிட சிறந்த பரிசு வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தப் பரிசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதுகிறேன்" என்றார்.
மேலும், இங்கு வயலில் சுமார் 1.2 மில்லியன் சூரியகாந்தி பூக்கள் இருப்பதாக கூறியுள்ளார், இந்த வயல் நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் இதனை மக்கள் கண்டு ரசித்து புகைபடம் எடுத்து செல்கின்றனர்.