இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 45 வயது நபர் - சிங்கப்பூர் அரசு அளித்த கடும் தண்டனை!

Sexual harassment Singapore
By Vinothini Jul 03, 2023 10:01 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 சிங்கப்பூரில் இளம் வாலிபருக்கு ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்கள்

சிங்கப்பூரில் 20 வயதான இளைஞரும், 45 வயதான ஜெஃப்ரி பெ என்பவரும் நண்பர்களாக உள்ளனர். இவர்கள் நண்பர்களாகி சில காலங்களில் நைட் பப்-க்கு சென்று இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்பொழுது அந்த இளைஞருக்கு போதை அதிகமானதால் ஜெஃப்ரி தன்னுடன் வந்து வீட்டில் உறங்குமாறு கேட்டுள்ளார்.

man-sexually-harrassed-20-years-old-man

அப்பொழுது நன்றாக தூங்கிக்கொண்டிருந்த இளைஞரை ஜெஃப்ரி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது, இது தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டிருந்தது.

தண்டனை

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டு அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மேலும், விசாரணை நடத்தியதில் ஜெஃப்ரி பெ, பாதிக்கப்பட்ட இளைஞரின் சம்மதத்தின் பேரில்தான் அது போன்ற சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.

man-sexually-harrassed-20-years-old-man

பாதிக்கப்பட்ட இளைஞர் தனது பாலுணர்வுக்கு சம்மதம் தெரிவித்ததாகவும், தன் மீது காதல் வயப்பட்டதாகவும் விசாரணையின் போது தெரிவித்தார். ஆனால் நீதிபதி மாவிஸ் சியோன், பாதிக்கப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும், எனவே, அவர் மீது ஜெஃப்ரி பெ நிகழ்த்திய பாலியல் செயல்களுக்கு அவரால் சம்மதம் தெரிவித்திருக்க இயலாது என்றும் கூறி, 12 கசையடிகள் கொடுத்து, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.