குழந்தைகளை குறிவைத்து சீரழித்த 45 வயது நபர், 1623 பாலியல் குற்றங்கள் - கொடூரம்!
குழந்தைகள் பராமரிப்பாளர் ஒருவர் 1623 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டார்க் நெட்
சமீபத்தில் காலமாக குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து, இணையத்தின் ’டார்க் நெட்’ வாயிலாக, ஆஸ்திரேலியா புலனாய்வாளர்களுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது. இதில் குழந்தைகளின் பாலியல் படங்களின் அடிப்படையில், சைபர் புலனாய்வாளர்கள் 45 வயதான ஒருவரை பிடித்தனர்.
அவர் பிரிஸ்பேன் என்ற பகுதியில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்றினை நடத்தி வருகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் மட்டும் 91 குழந்தைகளை சீரழித்ததாக தெரியவந்துள்ளது. மேலும், விசாரணையில் இவர் 1623 பாலியல் குற்றங்களை செய்துள்ளதாக போலீசார் கண்டறிந்தனர், அனைத்தும் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.
தீவிர விசாரணை
இந்நிலையில், அந்த நபரிடம் இருந்து 2007 - 2022 இடையே பதிவு செய்யப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் புகைப்படங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அவை அனைத்தும் பருவமடையக் காத்திருக்கும் பெண் குழந்தைகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகளாக இருப்பதைக் கண்டு அதிர்ந்திருக்கின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட 91 குழந்தைகளில் 87 பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் இந்த பராமரிப்பாளர் பயணம் மேற்கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இவர் பின்னணியில் உலகளவிலான குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கிரைம் வெப் இருக்கலாம் என கணித்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில், 35 புலனாய்வாளர்கள் களத்தில் இறங்கி சர்வதேச அளவிலான விசாரணயை முன்னெடுத்து வருகின்றனர்.