அப்பாடி எவ்வளவு தூரம்?..நீண்ட பயண நேரம் காரணமாக முதல் நாளே வேலையை விட்ட இளைஞர்!
நீண்ட பயண நேரம் காரணமாக முதல் நாளே வேலையை விட்ட இளைஞரின் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேலையை ராஜினாமா செய்த நபர்
நீண்ட பயண நேரம் காரணமாக முதல் நாளே வேலையை ராஜினாமா செய்தவரின் இணையதள பதிவு ஒன்று வைரலானது. அதில் அவர் கூறியிருப்பதாவது 'தனக்கு ஒரு நல்ல நிறுவனத்தில், தகுந்த சம்பளத்துடன் வேலை கிடைத்தது. அந்த நிறுவனத்தில் காலியிடங்கள் இருந்தது.
அதனால் சில சுற்றுகள் நேர்காணலுக்கு பிறகு என்னை வேலைக்கு எடுத்தார்கள். இது எனது முதல் வேலை என்பதால் மிகவும் உற்சாகத்துடன் இருந்தேன். ஆனால் அங்கு செல்வதற்கான பயண நேரம் அதிகமாக இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். சுமார் 36 கிமீ தூரம் பயணிக்க வேண்டியதாக இருந்தது. அதற்கு குறைந்தது ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் ஆகும். டெல்லியின் வடமேற்கு பகுதியில் (பிங்க் லைன் ) நான் வசிக்கிறேன்.
எனது வேலை மௌல்சாரி அவென்யூவை அடிப்படையாக கொண்டிருந்தது. சில கணக்கீடுகளில் அலுவலக நேரம், பயண நேரம் போக 10 மணிநேரம் நான் வீட்டில் இருப்பேன். அதில் 7 மணிநேரம் தூக்கத்திற்காக செலவிட மீதம் உள்ள 3 மணி நேரம் மட்டுமே இலவசமாக வீட்டில் இருக்க நேரம் கிடைப்பதாக தெரியவந்தது. மேலும் பயணத்திற்காக மட்டும் ரூ.5000 செலவாகும். என்னால் இடமாற்றமும் செய்யவும் இயலாது.
இதனால் தான் வேலையை விட்டுவிட்டேன் என்று அவர் அந்த பதிவில் எழுதியுள்ளார். இந்த பதிவிற்கு கீழ் நிறைய இணையவாசிகள் அவருக்கு ஆறுதலும், வேலை பற்றியும், எப்படி இதை சமாளிப்பது, வேலை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல போன்ற கமெண்டுகளை எழுதினர்.
மீண்டும் ஒரு பதிவு
இந்நிலையில் இந்த பதிவிற்கு வந்த கமெண்டுகளை படித்த பிறகு அந்த நபர் மேலும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் 'தனது வேலையை ராஜினாமா செய்வதற்கான முடிவு அவசரமாக எடுக்கப்பட்டதாக உணர்ந்ததாக கூறினார். "நான் தவறு செய்தேன். மற்ற அனைவரும் இவ்வளவு பயணம் செய்வதை நான் அறிந்திருக்கவில்லை.
என்னிடம் பேசுவதற்கு யாரும் இல்லாததால் நான் ஒரு அவசர முடிவை எடுத்தேன். அடுத்த முறை எனக்குக் கிடைக்கும் வேறு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வேன் . நன்றி தோழர்களே,” என்று பதிவிட்டுள்ளார்.