Sunday, May 18, 2025

சொத்துக்காக நடந்த கொடூரம் - மகளின் அந்தரங்க உறுப்பில் தந்தை செய்த செயல்

Sexual harassment Rajasthan
By Karthikraja 5 months ago
Report

உறவினர்களை பழிவாங்க தனது மகளை வைத்து தந்தை கொடூர திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.

சொத்து பிரச்சனை

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர், உறவினர்களுடன் ஏற்பட்ட சொத்து பிரச்சனையில், அவர்களை பழி வாங்க மனிதாபிமானமற்ற திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். 

harassment awareness

கடந்த 2023 ஆம் ஆண்டு குமுர்வாலி காவல் நிலையத்தில், நள்ளிரவில் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததனது உறவினர்கள் தனது மகள் மற்றும் மனைவியை கடத்தி கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார்.

டிஎன்ஏ சோதனை

மேலும், அவரின் 7 வயது மகளும் தந்தை சொன்னதையே கூறியுள்ளார். மேலும், அவரது மகளின் ஆடையில் விந்தணு இருப்பதும், பிறப்புறுப்பில் இருந்த காயங்களும் அதை உறுதிப்படுத்தியது. ஆனால் காவல் துறையினருக்கு இதில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், இந்த வழக்கு பெண்கள் குற்றங்களுக்கான சிறப்புப் புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றப்பட்டது. 

harassment awareness

சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும், சிறுமியின் ஆடையில் இருந்த விந்தணு டிஎன்ஏ சோதனையில் தந்தையின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போனது. விசாரணையில் சிறுமி தூங்கும் போது தந்தை அவரது பிறப்புறுப்பை காயப்படுத்தியுள்ளார். அது உறவினர்கள் செய்தது என்றும் சிறுமியிடம் தெரிவித்துள்ளார்.