அண்ணியின் தலையை துண்டித்து கையில் கொண்டுச்சென்ற நபர் - அதிரவைக்கும் சம்பவம்
அண்ணியின் தலையை துண்டித்து கையில் எடுத்து சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்து பிரச்சனை
மேற்கு வங்கம், பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் விவசாயிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சாலையில் ஒருவர், அரிவாளுடன் ரத்தம் வடிந்தபடி துண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தலையை கொண்டுச் சென்றுள்ளார்.
தொடர்ந்து அந்த நபர் காவல் நிலையத்திற்கு சென்றார். பின் விசாரித்ததில் அவர் பிமல் மந்தல் என்பது தெரியவந்தது.
கொடூர கொலை
சொத்து பிரச்சினை காரணமாக குடும்பத்தினர் மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சாதி மந்தல், தனது கொழுந்தனார் பிமலிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த பிமல், தனது அண்ணி சாதி மந்தலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதனையடுத்து பிமல் மந்தலை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.