தாயுடன் நண்பன் தகாத உறவு - மகன் செய்த விபரீத செயல்!
நண்பனை இளைஞன் ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயுடன் உறவு
மத்தியப் பிரதேசம் போபாலில், ஷியாம் நகர் மல்டியில் ஆஷிஷ் என்ற 25 வயது நபரின் சடலம் மீட்கப்பட்டது. அவரது கழுத்து அறுக்கப்பட்டு, தலையில் கல்லால் தாக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ரஞ்சித் என்பவர் கைது செய்யப்பட்டார். பின் அவரிடம் நடத்திய விசாரணையில், உயிரிழந்த ஆஷிஷ் தனது தாயுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்துள்ளார்.
இளைஞன் செய்த செயல்
தன் வீட்டிற்கு அருகில் வரக்கூடாது என்று ரஞ்சித் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் ஆஷிஷ் மீண்டும் சந்தித்ததாக தெரிகிறது.
இந்நிலையில், ரஞ்சித், தனது நண்பர்களான நிகில் மற்றும் வினய் ஆகியோருடன் சேர்ந்து ஆஷிஷை தாக்கியுள்ளார்.
அதில் ஆஷிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.