தாயை காப்பாற்ற முயன்ற மகள், 107 முறை கத்தியால் குத்திய சைக்கோ தந்தை - கொடூர கொலை!
தந்தையிடம் இருந்து தனது தாயை காப்பாற்ற முயன்ற மகள் தன் உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகராறு
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைகழகத்தில் படித்து வந்தவர் 21 வயதான ஏஞ்சலினா டிரான். இவர் தனது தாய் மற்றும் தாயின் இரண்டாம் கணவர் கியெப் கெய்ன் சவ் ஆகியோருடன் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பீகான் ஹில் பகுதியில் வசித்து வந்தார்.
இந்த பெண்ணின் தாய் மற்றும் இரண்டாம் தந்தைக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவது வழக்கம். டிரானின் தாய் விவாகரத்து பெறுவதற்கு முயன்றார், இதனால் பொருளிழப்பு ஏற்படும் என்று நினைத்த இரண்டாம் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் டிரானின் தாயை அடித்து 15 முறை கைகளிலாலே குத்தியுள்ளார்.
உயிரிழந்த மகள்
இந்நிலையில், சத்தம் கேட்டு வந்த டிரான் தனது தாயை காப்பாற்ற முயன்றார், அப்பொழுது அந்த இரண்டாம் தந்தையின் கைகளை அவர் இறுக்கி பிடித்துக்கொண்டார். அப்பொழுது அவரது தாய் தப்பி ஓடினார், இதனால் ஆத்திரமடைந்த அந்த கியெப் மகளான டிரானை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். அப்பொழுது கியெப் டிரானை 107 முறை கத்தியால் குத்தியுள்ளார், இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அச்சமயத்தில் ஒளிந்திருந்த தாய் அவசர உதவியை அழைத்துள்ளார், அதன்பிறகு போலீசார் வந்து அவரை கியெபை பிடித்தனர், அவர்கள் மிரட்டியதும் கத்தியை கீழே போட்டுள்ளார்.
அதன்பிறகு, டிரான் குறித்து விசாரணை நடத்தியதில், அவர் நன்றாக படிக்க கூடியவர் ஒரு சமூக பொறுப்புள்ள மாணவி என்றும், பிறருக்கு உதவிகள் செய்யும் நல்லெண்ணம் கொண்டவர் என்றும் அவரை அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.