6 வயது மகள் கொடூரமாக வெட்டிக் கொலை - தந்தையின் வெறிச்செயல்!

Attempted Murder Kerala
By Vinothini Jun 09, 2023 01:48 PM GMT
Report

 தனது 6 வயது மகளை தந்தை கொடூரமாக வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா

கேரள மாநிலம், ஆலப்புழாவில் மாவேலிக்கரையை அடுத்த புன்னமூடு பகுதியை சேர்ந்தவர் 38 வயதான மகேஷ், இவருடைய மனைவி வித்யா. இந்த தம்பதிக்கு 6 வயதில் நக்ஷத்ரா என்ற ஒரு மகள் உள்ளார்.

man-killed-his-girlchild-brutally

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே இவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார். அதன்பிறகு தனது சொந்த ஊருக்கு தந்தையும் மகளும் வந்தனர். அங்கு இவரது தந்தை இறந்துவிட்டார், தாயார் சுனந்தாவுடன் இவர்கள் வாழ்ந்து வந்தனர்.

கொலை

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சுனந்தா பக்கத்து வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் நக்ஷத்ராவும், மகேசும் மட்டும் இருந்தனர். அந்த சமயத்தில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு உடனே பதற்றத்துடன் அங்கு சுனந்தா ஓடி வந்தார்.

man-killed-his-girlchild-brutally

அப்போது சிறுமி கழுத்து வெட்டப்பட்ட நிலைமையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அருகில் இவரது தந்தை கையில் கோடாரியுடன் ஆவேசமாக நின்றுள்ளார், இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் அலறினார். அப்போது அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் இவரது கையிலும் வெட்டுக்காயம் விழுந்தது.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், இவருக்கு 2-ம் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளனர்.

குழந்தை இருந்ததால் யாரும் பெண் தரவில்லை, இதனால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.