14,000 ரூபாய் கடன் - நண்பரின் குழந்தைகளை கொன்ற இளைஞர்
கடனுக்காக நண்பரின் குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நண்பரின் குழந்தைகள்
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியை சேர்ந்த யோகராஜ் என்பவருக்கு திருமணமாகி தர்ஷன் (4) மற்றும் யோகித் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
யோகராஜின் நண்பரான வசந்த் இவரின் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கித் தர வெளியே அழைத்து செல்வது வழக்கம்.
குழந்தைகள் கொலை
வழக்கம் போல் நேற்று முன்தினம் குழந்தைகளை வெளியே அழைத்து சென்ற வசந்த் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் வசந்த் செல்போனுக்கு யோகராஜ் அழைத்த போது அவரின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அச்சமடைந்த யோகராஜ், உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோவிலின் பின்புறம் குழந்தைகளின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கடன்
இதையடுத்து வசந்தை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், யோகராஜ் தன்னிடம் வாங்கிய 14,000 ரூபாய் கடனை திருப்பி தர மறுத்தார். இதனால் என் மனைவியுடன் எனக்கு தகராறு ஏற்பட்டது.
அந்த ஆத்திரத்தில் அவரின் குழந்தைகளை கொன்று விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
14,000 ரூபாய் கடனுக்காக நண்பரின் குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவில் தேனிலவிற்கு சென்றவேளை கொடூரம் : கூலிப்படையை வைத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி IBC Tamil

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
