அலுவலகத்தில் இருந்து வந்த மெயில் - நொடியில் இளைஞர் எடுத்த வீபரித முடிவு!

Viral Video Uttar Pradesh Crime
By Vidhya Senthil Oct 22, 2024 09:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  நொய்டாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவர் 12வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  நொய்டா

உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டார் 74-ரில் 30 அடுக்கு கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதி உள்ளது.இந்த குடியிருப்பு பகுதியில் 12வது மாடியில் இளைஞர் ஒருவர் வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்திருக்கிறார்.

man in noida jump from 12th floor

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு வேலை போயுள்ளதாக மெயில் வந்ததாகக் கூறப்படுகிறது.இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துள்ளார்.

துடிக்க துடிக்க பாட்டியைக் கொன்ற பேரன் -ரத்தத்தை சிவலிங்கத்தின் மீது பூசிய கொடூரம்!

துடிக்க துடிக்க பாட்டியைக் கொன்ற பேரன் -ரத்தத்தை சிவலிங்கத்தின் மீது பூசிய கொடூரம்!

12வது மாடி

இதனையடுத்து மன உளைச்சலிலிருந்த அந்த இளைஞர் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.தொடர்ந்து 12வது மாடி பால்கனி திண்டில் நின்று கொண்டு குதிக்க யோசித்துக்கொண்டிருந்தார். இந்த சம்பவத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் குதிக்க வேண்டாம்” என்று கூச்சலிட்டனர்.

uttarpradesh

மேலும் சிலர் அந்த மாடியில் ஏறி இளைஞரை குண்டுக்கட்டாக தூக்காகியுள்ளனர்.இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.வேலை பறிபோனதால் 12வது மாடியிலிருந்து இளைஞர் ஒருவர் குதிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.