பணிப்பெண்ணின் பேத்திக்கு வீட்டை எழுதிவைத்த முதியவர் - நெகிழ்ச்சி சம்பவம்!
முதியவர் ஒருவர் தனது பணிப்பெண்ணின் பேத்திக்கு வீட்டை எழுதிவைத்துள்ளார்.
முதியவர் செய்த செயல்
குஜராத்தைச் சேர்ந்தவர் குஸ்தாத் பரோஜி. இவர் மனைவி உயிரிழந்த நிலையில், குழந்தைகளும் இல்லை. பொறியாளராக பணிபுரிந்த இவர், 2014இல் 89ஆவது வயதில் மறைந்தார்.

முன்னதாக, அமிஷா மக்வானா என்ற பெண்ணுக்கு அகமதாபாத்தில் உள்ள தனது 1,431 சதுர அடி வீட்டை உயில் எழுதிவைத்தார். மக்வானாவின் பாட்டி, பொறியாளர் குடும்பத்திற்கு ஒரு பராமரிப்பாளராக தனது சமையல் சேவைகளைச் செய்து வந்தார்.
மேலும், அமிஷா தனது பாட்டியுடன் பொறியாளர் குடும்பத்தின் வீட்டிற்குச் செல்வார். அப்போது பரோஜியுடன் ஏற்பட்ட் பாசத்தால் அமிஷாவுக்கு 13 வயது இருந்தபோது இந்த வீடு அவரது பெயரில் உயில் எழுதப்பட்டது. அவருடைய கல்விக்கும் பொறுப்பேற்றார்.
நெகிழ்ச்சி சம்பவம்
அமிஷாவுக்கு 18 வயது நிறைவடையும்வரை குஸ்தாதின் உறவினரின் பாதுகாப்பில் அவரது வீடு இருந்துவந்தது. தற்போது அமிஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் நிறுவனம் ஒன்றில் மனிதவளத் துறையில் பணிபுரியும் மக்வானா அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

"நான் அவரை தாய் என்று அழைப்பேன். எங்களுக்குள் ஒரு சிறப்புப் பிணைப்பு இருந்தது. அவர் என்னை கவனித்துக்கொள்ள விரும்பினார். அவர் என் அம்மா, அப்பாவைப் போல இருந்தார். எனக்கு 13 வயது வரை, அவர் எனக்கு ஒரு பாதுகாப்பு கேடயமாக இருந்தார்.
அவர் என்னை தத்தெடுக்க விரும்பினார். ஆனால் என் ஆர்வத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அவ்வாறு செய்யவில்லை. அவர் ஒரு பார்சி என்பதால், எனது நம்பிக்கையையோ அல்லது அடையாளத்தையோ மாற்ற விரும்பவில்லை.
தத்தெடுப்பு எனது உயிரியல் பெற்றோரிடமிருந்து என்னைத் தூர விலக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். இரு குடும்பங்களிடமிருந்தும் எனக்கு பாசம் கிடைக்க வேண்டும் என்று அவர் எப்போதும் விரும்பினார்" என தெரிவித்துள்ளார்.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan