கல்யாணமாகி 20 நாள் - மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்!
கணவன் மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
10 வருட காதல்
ஜார்கண்ட், கிலா கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார் சிங். இவருக்கு கடந்த மாதம் துர்க்கடியை சேர்ந்த பிரியங்கா குமாரி என்ற இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரியங்கா குமாரி ஜிதேந்திரா விஸ்வகர்மா என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால் சில காரணங்களால் இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
கணவனின் செயல்
இந்த சூழ்நிலையில் பிரியங்காவால் தனது காதலன் ஜிதேந்திரா விஸ்வகர்மாவை மறக்க முடியவில்லை. இருவரும் தினமும் செல்போனில் பேசி வந்துள்ளனர். அப்போது இருவரும் முடிவெடுத்து வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.
இருவரும் கிராமத்தை விட்டுச் செல்வதை அந்த கிராம மக்கள் சிலர் பார்த்து பிடித்து பிரியங்கா கணவர் மனோஜ்குமாரிடம் ஒப்படைத்து விட்டனர். ஆனால், அவரது கணவர் மனைவியை காதலனுடனேயே சேர்த்து வைத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.