1 மாதமாக பூச்சி புழுக்கள் மட்டும் தான் - உயிர்தப்பிய நபரின் பயங்கர நாட்கள்
அமேசான் காட்டில் தொலைந்த நபர் 1 மாதத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
அமேசான் காடு
பொலிவியாவை சேர்ந்தவர் ஜொனாட்டன் அகோஸ்டா(30). இவர் 4 நண்பர்களுடன் அமேசான் காடுகளில் வேட்டைக்குச் சென்றுள்ளார். அப்போது காட்டிற்குள் வழி மாறி சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அதன்பின், 30 நாட்கள் கடந்த நிலையில் அவரை உள்ளூர் வாசிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது அவர் அனுபவம் குறித்து கூறிய செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 31 நாட்களாக வெறும் பூச்சி மற்றும் புழுக்களைச் சாப்பிட்டு உயிர் தப்பியுள்ளார்.
உயிர்தப்பிய நபர்
மேலும் தனது ஷூவை வைத்து மழை நீரைச் சேகரித்துக் குடித்து வந்துள்ளார். இது தவிர சில நேரங்களில் காட்டில் உள்ள கொடூரமான விலங்குகளிடம் இருந்து மறைந்து தப்பி ஓடியுள்ளார். பல நாட்களாக நடந்துகொண்டே இருந்த நிலையில் உள்ளூர் மக்கள் சிலரைப் பார்த்துள்ளார்.
தற்போது, 31 நாட்களில் சுமார் 17 கிலோ எடை குறைந்துள்ளார் என்றும் உடலில் நீர் அளவு மிகவும் குறைவதாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 1 மாதம் கழித்து மீட்கப்பட்ட நபரை பலர் நலம் விசாரித்து வருகின்றனர்.