காதலியுடன் சேர்த்து வைக்காத குடும்பம் - இளைஞர் எடுத்த விபரீத முடிவால் சோகம்

bihar lovemurderissue'
By Petchi Avudaiappan Jan 21, 2022 08:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

பீகாரில் காதலை தன் வீட்டில் ஏற்றுக்கொள்ளாததால் தன்னை தானே கொலை செய்து தன் குடும்பத்தை காதலன் போலீசில் மாட்டி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டம் பாலுவாடோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த முன்னா ஷா  என்ற 22 வயது இளைஞர். பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணையே திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்ய அவர்கள் வீட்டார் சம்மதிக்கவில்லை.தன் குடும்பத்தாரிடம் எவ்வளவு சொல்லியும் அவர்கள் சம்மதிக்கவில்லை.

இதனிடையே ஒரு நாள் அப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கு ஒரு போன் வந்தது. முன்னா ஷா வீட்டில் சந்தகேப்படும்படி ரத்த கறையாக இருக்கிறது. என தகவல் சொல்லியுள்ளனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் முன்னா ஷாவின் காதல் விவகாரம் பிடிக்காததால் அவர்களது குடும்பத்தினரே அவரை கொலை செய்திருப்பார்கள் என்றே போலீசாருக்கு தோன்றியது. இதையடுத்து முன்னாஷா குடும்பத்ததைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கொலை செய்யப்பட்ட உடலை இவர்கள் என்ன செய்திருப்பார்கள் என யோசித்து காட்டுப்பகுதிகளில் ஆய்வு நடத்தினர். ஆனால் போலீசாருக்கு எந்தவித தடயமும் கிடைக்காததால் இந்த வழக்கு நகராமல் இருந்தது. மேலும் முன்னா ஷா வீட்டில் போலீசார் நடத்திய ரெய்டில் அவர் வீட்டில் அவரது செல்போன் கிடைக்கவில்லை.

அவரது செல்போனை டிராக் செய்தால் ஏதாவது க்ளு கிடைக்கும் என போலீசார் செல்போனை டிராக் செய்து அது இருந்த இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு முன்னா ஷாவே கிடைத்துவிட்டார். கொலை செய்யப்பட்ட முன்னா ஷா உண்மையில் கொலை செய்யப்படவில்லை உண்மையில் உயிருடன் தான் இருக்கிறார். இது குறித்து பின்னர் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னா ஷா காதலை அவர்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளாததால் அவர் வேண்டுமென்றே அவர் வீட்டில் ரத்தகறை ஆக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார். 

இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.