நடுவானில் விமானத்தில் ரத்தம் கக்கி இறந்த நபர் - பயத்தில் திகைத்த பயணிகள்!

Thailand Flight Death
By Sumathi Feb 10, 2024 11:54 AM GMT
Report

விமானத்தில் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயணி உயிரிழப்பு

தாய்லாந்து, பாங்காக்கில் இருந்து ஜெர்மனியின் முனிச் நகருக்கு லுப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது 63 வயது நிரம்பிய பயணி ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

thailand

தொடர்ந்து கடுமையாக மூச்சு வாங்கி, சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்தார். மூக்கில் இருந்தும் ரத்தம் கொட்டியது. அருகில் இருந்த அவரது மனைவி அதிர்ச்சியில் என்ன செய்வதென்று அறியாது அழுதார். சக பயணிகளும் பயத்தில் அலறினர்.

'மூளையை உண்ணும் அமீபா' - மூக்கு வழியாக நுழைந்து 10 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

'மூளையை உண்ணும் அமீபா' - மூக்கு வழியாக நுழைந்து 10 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

அதிர்ச்சி சம்பவம்

உடனே, விமான பணியாளர்கள் மற்றும் விமானத்தில் இருந்த டாக்டர் ஆகியோர் இணைந்து அவருக்கு முதலுதவி செய்தனர். சி.பி.ஆர். நடைமுறையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Lufthansa flight

அதன்பின், இறந்தவரின் உடல் விமானத்தின் கேலரிக்குள் வைக்கப்பட்டு, விமானம் தாய்லாந்துக்கு திருப்பிவிடப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் உரிய நடைமுறைகளுக்கு பிறகு அவரது உடல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என பயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.