இறந்தவர் உயிர்பிழைத்த அதிசயம் : உத்திரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
விபத்தில் உயிரிழந்ததாக மருத்துவரால் அறிவிக்கப்பட்ட நபர், மறுநாள் உயிருடன் வந்தது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் மருத்துவமனை ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளாது.
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீகேஷ் குமார். இவர் ஸ்ரீகேஷ் குமார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, வேகமாக வந்த இருசக்கர வாகனம் பலமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு ஸ்ரீகேஷ் குமாரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் உடற்கூராய்வு செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதனையடுத்து ஸ்ரீகேஷ் குமாரின் உடல், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் அவரை பரிசோதித்த மருத்துவர் குழு, உடலில் உயிர் இருப்பதற்கான சான்றுகள் இல்லாததால் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். மேலும் குடும்பத்தினர் அந்த மருத்துவமனைக்கு வந்து சேர காலதாமதம் ஆனதால், உடல்கூராய்வை மறுநாள் வைத்துக் கொள்ளலாம் என கருதி உடலை பதப்படுத்த ஐஸ் பெட்டியில் வைத்து மூடினர்.
மறுநாள் ஸ்ரீகேஷின் உடலை உடற்கூராய்வு செய்யும் அலுவல் ரீதியான பணிகளுக்காக சம்பவம் நடைபெற்ற காவல்சரகத்தில் இருந்து காவலர்கள் வந்தனர். குடும்பத்தினர் கையெழுத்திட உடலை உடற்கூராய்வு சென்ற போது தான் ஸ்ரீகேஷ் உயிருடன் இருப்பது தெரிந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரை மீண்டும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளனர். ஆயினும் ஸ்ரீகேஷ், கோமா நிலையில் இருந்து வருவதாக தெரியவந்துள்ளது. இது மெடிக்கள் மிராக்கிள் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் உயிரோடு இருப்பவரை எப்படி இரண்டு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் தவறுதலாக இறந்துவிட்டதாக கூறினர் என்பது குறித்து கண்டறிய விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.