கழுத்தில் பாம்புடன் டாஸ்மாக் கடைக்கு வந்த இளைஞர் - மது ஊற்றிக்கொடுத்து அட்ராசிட்டி
மதுக்கடைக்கு கழுத்தில் பாம்புடன் வந்த இளைஞர் மது வாங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கழுத்தில் பாம்பு
தர்மபுரி, நான்கு வழி சாலை அருகில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அங்கு இளைஞர் ஒருவர் கழுத்தில் பாம்பு ஒன்றை சுத்தி கொண்டு மது வாங்க கடைக்கு வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கடை விற்பனையாளர்கள் உடனடியாக மது கொடுத்து அனுப்பி விட்டனர். பின் அந்த நபர் மதுவை பாம்புக்கும் ஊத்திக் கொடுத்துள்ளார்.
இளைஞர் அட்ராசிட்டி
இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. தொடர்ந்து அந்த இளைஞர் பல கோணங்களில் பாம்பை பிடித்துக் கொண்டு பாம்புக்கு முத்தம் கொடுப்பது பீர் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
உடனே தகவலறிந்து போலீஸார் வருவதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.