சிறுவனை பீர் குடிக்க கட்டாயப்படுத்திய நபர் கைது

Viral Video Kerala
By Thahir Sep 21, 2022 05:39 PM GMT
Report

கேரளாவில் அண்ணன் மகனை பீர் குடிக்க கட்டாயப்படுத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுவனை பீர் குடிக்க வைத்த சித்தப்பா 

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நெய்யாட்டிங்கரை பகுதியில் வசித்து வருபவர் மனு.இவர் தனது அண்ணன் மகனான 8 வயது சிறுவனை அழைத்துக் கொண்டு ஓணம் கொண்டாட சென்றுள்ளார்.

அப்போது சிறுவனை வெளியே அழைத்துச் சென்ற போது மது கடை ஒன்றிற்கு சென்று பீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார் மனு.

அதை சிறுவனிடம் கொடுத்து குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். வேறு வழியில்லாமல் சிறுவன் குடித்துள்ளான்.

சிறுவனை பீர் குடிக்க கட்டாயப்படுத்திய நபர் கைது | Man Arrested For Forcing Boy To Drink Beer

இதை தனது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ காட்சியினை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் சிறுவனின் பெற்றோர்.

இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் நெய்யாட்டிங்கரை போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை அடுத்து மனுவை போலீசார் கைது செய்துள்ளனர்.