பெண்ணை 1000ம் முறைக்கும் மேல் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை - 51 வயது நபர் வெறிச்செயல்!
19 வயது இளம்பெண்ணை 14 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 51 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
மேற்கு ரஷ்யாவின் செல்யாபின்ஸ்கில் என்ற இடத்தில் விளாடிமிர் செஸ்கிடோவ் (Vladimir Cheskidov) என்ற 51 வயது நபர் கடந்த 2009ம் ஆண்டு ஒரு பெண்ணை நேரில் சந்தித்தார். அப்போது அந்த பெண்ணின் வயது 19. பின்னர் அந்த பெண்ணை ஸ்மோலினோ (Smolino) என்ற கிராமத்திலிருக்கும் தனது வீட்டிற்கு மது அருந்த அழைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த அந்த பெண்ணை விளாடிமிர் செஸ்கிடோவ் தனது வீட்டிலேயே பூட்டி வைத்துள்ளார். பெண்ணை அடிமையாக வைத்துக்கொண்டு 14 ஆண்டுகளாக 1000ம் முறைக்கும் மேல் கொடுமைப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அந்த நபர். பல ஆண்டுகளாக இந்த கொடூரம் நடந்து வர ஒருநாள் விளாடிமிர் செஸ்கிடோவ் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண் விளாடிமிர் செஸ்கிடோவின் தாயின் உதவியுடன் தனது 33 வயதில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
போலீசார் கைது
இதனைத் தொடர்ந்து காவல் துறையிடம் சென்ற அந்த பெண் '2009 முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக விளாடிமிர் செஸ்கிடோவ் என்ற நபரால் அவரின் வீட்டில் அடைக்கப்பட்டு கத்தி முனையில் 1000ம் முறைக்கும் மேல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்.
மேலும் கடந்த 2011ல் வேறொரு பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்து கத்தியால் குத்திக் கொலை செய்தார் என்று பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விளாடிமிர் செஸ்கிடோவின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்த போது அவரின் வீட்டில் பாலியல் பொம்மைகள், ஆபாசப்பட சீடி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் கொலை,கொள்ளை,பாலிய வன்கொடுமை கடத்தல் போன்ற குற்றச் சாட்டுகளில் விளாடிமிர் செஸ்கிடோவை போலீசார் கைது செய்து பின்னர் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.