’213 இடங்கள்’ வங்கத்து சிங்கம் மமதா பானர்ஜி வென்ற கதை!
சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் மேற்கு வங்க முடிவுகள் தான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்றே கருத்துக் கணிப்புகள் முடிவுகள் கணித்திருந்தன.
ஆனால் தேர்தல் முடிவுகள் அந்த கணிப்புகளை எல்லாம் பொய் ஆக்கியிருக்கிறது. கடந்த முறை வென்ற இடங்களை விடவும் அதிகமான இடங்களில் வென்று வாக்கு சதவிகிதத்தையும் அதிகரித்திருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.
200-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று மூன்றாவது முறையாக முதல்வர் ஆகிறார் மமதா பானர்ஜி. பாஜக 100 இடங்களுக்குள் கட்டுப்படுத்திய மமதாவுக்கு இந்தியா முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் மமதா பானர்ஜியின் வெற்றி எப்படி சாத்தியப்பட்டது என்பது பற்றியதே இந்த காணொளி