விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த புகழ்பெற்ற மலையாள நடிகர் மரணம்

KottayamPradeep MalayalamActor
By Irumporai Feb 17, 2022 03:52 AM GMT
Report

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61

. 2001ஆம் ஆண்டு தனது 40வது வயதில் ஐ.வி. சசி இயக்கிய ‘ஈ நாடு இன்னலே வரே’ படத்தின் மூலம் திரையுலகின் அறிமுகமான கோட்டயம் பிரதீப் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி, நண்பேன்டா, விஜய்யின் தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ‘ராஜமாணிக்யம்’, ‘2 ஹரிஹர் நகர்’, ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ உள்ளிட்ட படங்களில் இவரது நகைச்சுவை பிரபலம்,

2010ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இவர் பேசும் மலையாள வசனங்கள் அப்போது மிகவும் பிரபலமாக இருந்தன.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த  புகழ்பெற்ற மலையாள நடிகர் மரணம் | Malayalam Actor Kottayam Pradeep Passed Away

You May Like This


இந்நிலையில் இன்று அதிகாலை நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு கேரள திரையுலகத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.