பாலியல் புகார்...பிக் பாஸ் பிரபலத்தை சென்னை விமானநிலையத்தில் மடக்கிய காவல்துறையினர்!!

Tamil nadu Bigg Boss Kerala
By Karthick Oct 05, 2023 07:37 AM GMT
Report

சென்னை விமான நிலையத்தில் பாலியல் புகாரில் சிக்கிய பிக்பாஸ் பிரபலத்தை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷியாஸ் கரீம்

கேரளாவில் பிரபல நடிகராக வளம் வருபவர் ஷியாஸ் கரீம் என்பவர். திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள இவர் மலையாளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

malayala-bigg-boss-contestant-arrested-in-chennai

தொடர்ந்து நடித்து வரும் இவர் மீது அண்மையில் கண்ணூர் காவல் நிலையத்தில் பாலியல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பல முறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தன்னிடம் இருந்து ரூ.11 லட்சம் மோசடி செய்ததாகவும் அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் கைது

2021-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு துவக்கம் வரை ஷியாஸ் தன்னுடன் உறவின் இருந்ததாக குறிப்பிட்டுள்ள அப்பெண், தங்களுக்குள் இருந்த உறவின் காரணமாக கர்ப்பமான நிலையில், தன்னை ஷியாஸ் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

malayala-bigg-boss-contestant-arrested-in-chennai

அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், துபாயில் இருந்து சென்னை வந்த ஷியாஸ்'ஸை சுங்கத்துறை அதிகாரிகளால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்த கேரளா போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், கேரள மாநில காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.