மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மலையாள நடிகர்...!

Kerala
By Thahir Jun 28, 2022 10:32 AM GMT
Report

வில்லனாக நடித்து பிரபல நடிகர் என்.டி. பிரசாத் அவரது வீட்டிற்கு அருகில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 

வில்லன் நடிகர்

மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளிவந்த ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜு’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார் வில்லன் நடிகர் என்.டி. பிரசாத்.

மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து  கொண்ட மலையாள நடிகர்...! | Malayala Actor Sucide

இவர் இபா, கர்மானி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு இவரை கஞ்சா மற்றும் பிற போதை பொருட்கள் வைத்திருந்ததற்காக குற்றம்சாட்டி காவல்துறை கைது செய்தது. அவரிடம் இருந்து கொடிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.  

மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

43 வயதான இவர் மனைவி, 2 குழந்தைகளுடன் கொச்சி அருகே உள்ள கலமசேரி என்ற பகுதியில் வசித்து வந்தார்.

இவர் கடந்த ஜூன் 26-ம் தேதி இரவு அவரது வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இவர் தற்கொலை செய்துக்கொள்வதை கவனித்த அவரது குழந்தைகள் அருகில் இருந்தோரிடம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இதனை போலீசுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அவர் மன உளைச்சலாலும், குடும்பக் பிரச்சனைகளாலும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.