'' இந்திய தலைவர்கள் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும்.” - ஹிஜாப் விவகாரம் குறித்து மலாலா கண்டனம்.
இஸ்லாமிய பெண்களை ஹிஜாப் அணிந்து பள்ளிக்குச் செல்ல அனுமதி மறுப்பது கொடுமையானது எனவும் இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும். என பெண் உரிமைப் போராளி மலாலா கணடனம் தெரிவித்துள்ளார் .
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் இந்திய அளவில் பேசு பொருளானது இந்த நிலையில்கர்நாடகாவில் ஹிஜாப் - காவித்துண்டு பிரச்சனை தொடர்பான மாணவர்கள் போராட்டம் கலவரமாக மாறியது.
பல இடங்களில் காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைத்தனர். கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணிடம், காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம் ‘ என கோஷமிட்டனர்.
பதிலுக்கு அந்த மாணவியும் ‘அல்லாஹூ அக்பர்’ என முழக்கமிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உரிமைப்போராளியுமான மலாலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
“College is forcing us to choose between studies and the hijab”.
— Malala (@Malala) February 8, 2022
Refusing to let girls go to school in their hijabs is horrifying. Objectification of women persists — for wearing less or more. Indian leaders must stop the marginalisation of Muslim women. https://t.co/UGfuLWAR8I
இதுகுறித்து மலாலா தனது ட்விட்டர் பதிவில், . பெண்களை ஹிஜாப் அணிந்து பள்ளிக்குச் செல்ல அனுமதி மறுப்பது கொடுமையானது. பெண்களின் ஆடை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அணிந்தால் அவர்களை புறந்தள்ளுவது தொடர்வது வேதனை அளிக்கிறது.
இந்தியத் தலைவர்கள் இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.