சலாம் போடுவதற்கு இது மன்னராட்சி கிடையாது : கமல்ஹாசன்

Kamal Haasan
By Irumporai Jun 13, 2022 01:20 PM GMT
Report

ஒரு ஏழையை பணக்காரன் ஆக்கும் வியாபாரம் அல்ல அரசியல் எனவும், ஏழைகளே இல்லாமல் ஆக்குவது தான் அரசியல் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ரத்த தான வங்கி சேவையை அக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், தான் அரசியலில் இருந்து விலகி மீண்டும் படம் நடிக்க சென்றுவிட்டதாக சிலர் கூறுகின்றனர்.

அரசியல் பாதை தொடர்கிறது

ஆனால் அது உண்மையில்லை. சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பதல்ல. திரையில் இருந்தாலும் தலைவர் தான். என் வீரமும் வைராக்கியமும் ஒரு துளி கூட இன்னும் குறையவில்லை. அரசியலில் நாங்கள் எங்கள் பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

எங்களிடம் தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால் அவர்களிடன் வெறும் மேடை மட்டும் தான் இருக்கிறாது. நான் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் நடித்து மற்றவர்களுக்கு அனைத்தையும் பகிர வேண்டும் என்பதால் நடிக்கிறேன் என்றார்.

சலாம் போடுவதற்கு இது மன்னராட்சி கிடையாது : கமல்ஹாசன் | Makkal Needhi Mayyam Kamalhasan Press Meet

ஏழையை பணக்காரன் ஆக்குவது அரசியல் அல்ல

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், அரசியல் என்பது கமிஷன், கலக்‌ஷன் வாங்கி பணக்காரன் அவது கிடையாது. குறிப்பாக ஒரு ஏழையை பணக்காரன் ஆக்குவது அரசியல் அல்ல, ஏழைகளே இல்லாமல் ஆக்குவது தான் உண்மையான அரசியல் என கூறினார்.

உங்கள் தெருவில் ஒருவன் பண்க்காரனாக இருப்பது பெரிதல்ல, அனைவரும் நலமுடன் இருப்பதே பெரிது. ஒன்றியம் என்பது நான் ஒரு அரசியல் கட்சியை சாடுகிறேன் என சொல்கிறார்கள் ஆனால் அது உண்மையில்லை. நான் எல்லா ஒன்றியத்தையும் தான் சொல்கிறேன்.

தலைமையில் வந்துவிட்டால் சலாம் போடுவதற்கு இது மன்னராட்சி கிடையாது, இது மக்களாட்சி, கேள்விகள் கேட்கப்படும் என்றார். 

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி!