தீவிரமடைந்த மக்கள் போராட்டம் : பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகல்!

Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lanka Government
By Swetha Subash May 09, 2022 10:49 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இலங்கை
Report

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளாகிய பொதுமக்கள் அரசிற்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தீவிரமடைந்த மக்கள் போராட்டம் : பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகல்! | Mahinda Rajapaksa Resigns From Prime Minister Post

கடும் பொருளாதார நெருக்கடிக்கு நீங்கள் தான் காரணம் எனவே அதிபர் கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒரு மாதமாக நீடித்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த அவசர நிலை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக உறுதியான எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது.

தீவிரமடைந்த மக்கள் போராட்டம் : பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகல்! | Mahinda Rajapaksa Resigns From Prime Minister Post

மேலும், அதிபர் கோத்தபய வீட்டில் நடந்த சிறப்பு கேபினட் கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சே, பேசும்போது தான் பதவி விலகுவது மட்டும்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்றால் அதை செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பொருளாதார நெறுக்கடியால் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார்.