திருகோணமலையை விட்டு வெளியேறிய மகிந்த ராஜபக்ச..எங்கு சென்றார்? - வெளியான புதிய தகவல்

Mahinda Rajapaksa Sri Lanka
By Swetha Subash May 17, 2022 12:23 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இலங்கை
Report

இலங்கையில் மக்களின் கடுமையான போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகினார்.

திருகோணமலையை விட்டு வெளியேறிய மகிந்த ராஜபக்ச..எங்கு சென்றார்? - வெளியான புதிய தகவல் | Mahinda Rajapaksa Gets Out Of Trincomalee

இதனையடுத்து மகிந்த ராஜபக்ச ஆதரவு அரசியல்வாதிகளை டார்கெட் செய்து பொதுமக்கள் தாக்க தொடங்கினர். அரசுக்கு எதிரான இந்த போராட்டம் வன்முறையாக மாறி 100-க்கும் அதிகமான ராஜபக்சே ஆதரவாளர்கள் வீடுகள் தீ வைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து குருநாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதேபோல் ராஜபக்சேவின் மருமகள் ஹெலிகாப்டரில் குடும்பத்தினருடன் தப்பியோடும் காட்சிகளும் வெளியாகியிருந்தது.

திருகோணமலையை விட்டு வெளியேறிய மகிந்த ராஜபக்ச..எங்கு சென்றார்? - வெளியான புதிய தகவல் | Mahinda Rajapaksa Gets Out Of Trincomalee

இதனையடுத்து மகிந்த ராஜபக்ச கொழும்பை விட்டு தப்பி ஓடி திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்த நிலையில் தற்போது அவர் அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி, திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறியுள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்புவுக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் முன்னாள் பிரதமர் தங்கி இருக்கும் அந்த பகுதியின் பாதுகாப்பை பாதுகாப்பு தரப்பினர் பலப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.