நாடு தப்பிக்க கடற்படை தளத்தில் மறைந்திருக்கும் ராஜபக்சே குடும்பம் - மக்கள் சுற்றிவளைத்து முற்றுகை!

Mahinda Rajapaksa Sri Lanka
By Swetha Subash May 10, 2022 09:03 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இலங்கை
Report

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளாகிய பொதுமக்கள் அரசிற்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

நாடு தப்பிக்க கடற்படை தளத்தில் மறைந்திருக்கும் ராஜபக்சே குடும்பம் - மக்கள் சுற்றிவளைத்து முற்றுகை! | Mahinda Rajapaksa Family Hiding In Thirikonamalai

கடும் பொருளாதார நெருக்கடிக்கு நீங்கள் தான் காரணம் எனவே அதிபர் கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு மாதமாக நீடித்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த அவசர நிலை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருளாதார நெறுக்கடியால் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். பிரதமர் பதவி விலகிய நிலையிலும், அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, பல இடங்களில் வன்முறை வெடித்து, கலவரமாக உருவெடுத்துள்ளது.

மேலும், பிரதமர் பதவியில் இருப்போர் தங்குவதற்கான சொகுசு மாளிகையான அலரி மாளிகையிலிருந்து ராஜபக்சே இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார். இதனை தொடர்ந்து அவரது குடும்பம் வெளிநாடு தப்பிச்செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

நாடு தப்பிக்க கடற்படை தளத்தில் மறைந்திருக்கும் ராஜபக்சே குடும்பம் - மக்கள் சுற்றிவளைத்து முற்றுகை! | Mahinda Rajapaksa Family Hiding In Thirikonamalai

இந்நிலையில் தற்போது ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.