கிரேன் விபத்து... உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..!
மகாராஷ்டிராவில் பாலம் கட்டுமான பணியின் போது கிரேன் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 15 பேர் குடும்பத்தினர் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு.
15 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள ஷாபூர் என்ற இடத்தில் பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் ராட்சத கிரேன் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிரேன் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளான பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் 6 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
இந்த நிலையில் இந்த கோர விபத்தில் உயிரிழந்த 15 தொழிலாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்டிராவின் ஷஹாபூரில் நடந்த சோகமான விபத்தால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் காயமடைந்தவர்களுடன் உள்ளன. NDRF மற்றும் உள்ளூர் நிர்வாகம் விபத்து நடந்த இடத்தில் பணியாற்றி வருகிறது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான உதவியை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
Pained by the tragic mishap in Shahapur, Maharashtra. My deepest condolences to the families of those who lost their lives. Our thoughts and prayers are with those who are injured. NDRF and local administration are working at the site of the mishap and all possible measures are…
— PMO India (@PMOIndia) August 1, 2023