விஜய்யை கடுப்பேற்றிய அந்த பேட்டி இதுவா? - 10 வருடமாக பேட்டி கொடுக்காததன் பின்னணி இதுதான்..!
பீஸ்ட் பட நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பகிர்ந்து கொண்ட தகவல் ஒன்று ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பட ரிலீசுக்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் நேற்று முன்தினம் சன் டிவியில் விஜய் பங்கேற்ற நேருக்கு நேர் பேட்டி ஒன்று ஒளிபரப்பானது. இயக்குநர் நெல்சனே விஜய்யை பேட்டி கண்டார். இதில் ஏராளமான கேள்விகளுக்கு ஜாலியாகவும், நிதானமாகவும் விஜய் பதிலளித்தார்.
What is the point in giving an interview when they make up their own answers ..!! pic.twitter.com/CrH8Cg9AeO
— Vijay (@actorvijay) July 5, 2013
அப்போது 10 ஆண்டுகளாக ஏன் நேர்காணல் எதுவும் கொடுக்கவில்லை என விஜய்யிடம் நெல்சன் திலீப்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒரு நேர்காணலில் நான் சொன்ன விசயத்தை தவறாக புரிந்துகொண்டு வேறுவிதமாக எழுதினார்கள். அதைபார்த்து என்னிடம் பலர் கேள்வி எழுப்பினர். நான் அவர்களிடம் விளக்கமளித்தேன். இதுபோன்ற பிரச்சனைகள் வருவதால் நேர்காணல் கொடுக்காமல் இருந்து வந்ததாக விஜய் கூற அப்படி என்ன நடந்தது என ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட பதிவு தற்போது அவரது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த பதிவில் ஒரு குறிப்பிட்ட பிரபல வார இதழில் வெளியான தனது பேட்டி குறித்து பக்கத்தின் படத்தை வெளியிட்டு, "அவர்களே பதில்களை உருவாக்கிக் கொள்ளும்போது பேட்டி கொடுப்பதில் என்ன பயன்"? எனக் கேட்டு இருக்கிறார் விஜய். இது தான் அந்த பேட்டி கொடுக்காததன் பின்னணி என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil
