4 கணவன்கள்..விடிஞ்சா மாயம் - ஸ்கெட்ச் போட்டு பணத்தை சுருட்டிய இளம்பெண்!

Chennai Madurai Marriage Crime
By Sumathi Dec 04, 2022 08:15 AM GMT
Report

பல பேரை திருமணம் செய்து பண மோசடியில் இளம்பெண் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 கணவன்கள்

சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (55), இவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மேகலா, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் நடராஜன் (33), கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக

4 கணவன்கள்..விடிஞ்சா மாயம் - ஸ்கெட்ச் போட்டு பணத்தை சுருட்டிய இளம்பெண்! | Madurai Woman Arrested For Marrying Four Man

ஒரு பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அபிநயா(28), என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்று உள்ளது.

விடிஞ்சா மாயம்

தொடர்ந்து, சில நாட்களில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் 17 சவரன் தங்க நகைகள், பட்டு புடவைகள் மற்றும் 20,000 பணத்துடன் மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர். அதன்பின், பழையமகாபலிபுர சாலை விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், ஏற்கனவே விஜய் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். விஜய் தன்னை விட மூத்தவர் என்பதால் அவருடன் வாழ பிடிக்காமல் பிரிந்துள்ளார். அதன்பின் நகை கடையில் வேலை பார்த்தபோது செந்தில்குமார் என்பவரை காதலித்து 2வது திருமணம் செய்துள்ளார்.

பலே திட்டம்

இவர்களுக்கு 1 ஆண் குழந்தை உள்ளது. ஆனால் குழந்தை பிறந்த 4 மாதத்தில் இருவரையும் விட்டுவிட்டு அபிநயா மாயமாகியுள்ளார். அதுகுறித்து போலீஸார் விசாரணையில் மதுரையில் தன்னுடன் கம்ப்யூட்டர் வகுப்பு பயின்ற பிரபு என்பவருடன் கேரளாவுக்கு பயணம் சென்றுள்ளார்.

அதனையடுத்து, பெண்கள் விடுதியில் தங்கி செல்போன் கடையில் வேலைபார்த்தபோது ஆட்டோ டிரைவர் பன்னீர்செல்வம் என்பவருடன் பழகி 3வது திருமணம் செய்துள்ளார். 10 நாட்களில் பணம், நகையை சுருட்டிக்கொண்டு தப்பியுள்ளது தெரியவந்தது.