"மகனையும், மருமகளையும் சேர்த்து வையுங்கள்" - தனுஷின் பெற்றோர் என கூறும் கதிரேசன் தம்பதியினர் சூப்பர்ஸ்டாருக்கு வேண்டுகோள்
மகனையும், மருமகளையும் சேர்த்து வையுங்கள் சூப்பர்ஸ்டாருக்கு வேண்டுகோள் - தனுஷின் பெற்றோர் என நீதிமன்றத்தை நாடியுள்ள கதிரேசன் தம்பதியினர் கோரிக்கை.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த தம்பதியினர் கதிரேசன் மற்றும் மீனாட்சி. இவர்களது மூத்த மகன் கலையரசன் பிளஸ் ஒன் படிக்கும் போது காணாமல் போய்விட்டார்.
இந்நிலையில் சினிமாவில் தனுஷ் நடித்த படத்தை பார்த்துவிட்டு தனது மகன் கலையரசன் தான் தனுஷ் எனவும் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தது பரபரப்புக்குள்ளானது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியினர் தற்பொழுது பிரிய போவதாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது.
தற்போது சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வசித்து வரும் கதிரேசன் தம்பதியினர் இதனை அறிந்து வேதனை அடைந்துள்ளனர்.
தங்களது மகன் (தனுஷ்) மற்றும் (ஐஸ்வர்யா) மருமகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களின் எதிர்காலத்திணை கருத்தில் கொண்டு இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினரை சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மீனாட்சி அம்மாள் கூறும்போது, “ வயதான காலத்தில் நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம் கலையரசா நீ உனது பிள்ளைகள், மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும்” என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
