பிரேசில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மதுரை மாணவி - குவியும் பாராட்டு
பிரேசிலில் நடைபெற்று வரும் காது கேளாதோர் ஒலிம்பிக் தொடரில் மதுரை மாணவி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
மே 1 ஆம் தேதி முதல் வரும் 15 ஆம் தேதி வரை பிரேசிலில் காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் நடந்த பேட்மிட்டன் போட்டியில் மதுரை மாநகராட்சி அவ்வை பள்ளியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஜெர்லின் அனிகாவும், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த வீராங்கனையும் மோதினர்.
இப்போட்டியில் 21-18, 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று ஜெர்லின் அனிகா தங்கம் வென்று அசத்தினார். இதேபோல கலப்பு இரட்டையர் பிரிவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அபினவ் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஜெர்லின் அனிகா மலேசியா நாட்டை சேர்ந்த கலப்பு இரட்டையர் ஜோடியை 21-14, 21-8 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
இந்தியாவிற்காக விளையாடி 2 தங்கப் பதக்கத்தை வென்றுள்ள மதுரை பள்ளி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.